பாராளுமன்றம் எதிர்வரும் ஜனவரி 05 முதல் 08 வரை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.
பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான இன்றைய (30) கூட்டத்தில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் பாராளுமன்ற அமர்வினை அறிக்கையிட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, படைக்கல சேவிதர் அறிவித்துள்ளார்.
உரிய சுகாதார வழிகாட்டல் மற்றும் ஏனைய நடைமுறைகளைப் பின்பற்றி ஊடகவியலாளர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 03ஆம் திகதி முதல், பாராளுமன்ற நடவடிக்கைகளை அறிக்கையிட, ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment