குருநாகலில் சுவர் இடிந்து விழுந்து 4 வாகனங்கள் சேதம், ஒருவர் சிறு காயம் - News View

About Us

About Us

Breaking

Friday, December 25, 2020

குருநாகலில் சுவர் இடிந்து விழுந்து 4 வாகனங்கள் சேதம், ஒருவர் சிறு காயம்

குருநாகலில் சுவர் இடிந்து விழுந்தமையினால் நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளன. 

இதில் 03 மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கர வண்டி ஒன்றும் டிபர் வாகனம் ஒன்றும் என மொத்தமாக 04 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குருநாகல் பிரதான வீதியில் வர்த்தக கட்டிடமொன்று புனர்நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில் நேற்றுக் காலை 9.30 மணி அளவில் சுவர் இடிந்து விழுந்தமையினால் அதன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டி ஒன்றும் மற்றும் டிபர் வாகன ஒன்றும் பாரிய சேதமடைந்துள்ளன. 

அத்துடன் அருகில் நின்ற நபர் ஒருவர் சிறு காயத்திற்கு உள்ளாகி குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குருநாகல் தீயணைப்பு படையினர் மீட்பு நடைவடிக்கைகளை மேற்கொண்டனர். குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவத்தகம நிருபர்

No comments:

Post a Comment