புனானை சிகிச்சை நிலையத்தில் திருடி கைதான 4 கொரோனா நோயாளர்களையும் தனிமைப்படுத்துமாறு உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Sunday, December 13, 2020

புனானை சிகிச்சை நிலையத்தில் திருடி கைதான 4 கொரோனா நோயாளர்களையும் தனிமைப்படுத்துமாறு உத்தரவு

(கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு புனானை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பும் போது அங்குள்ள இலத்திரனியல் பொருட்களைக் கொள்ளையிட்ட நான்கு நோயாளிகளை நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நோய் குணமடைந்து வீட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படபோது அங்கிருந்த உணவு உண்ணும் பீங்கான் மற்றும் இலத்திரனியல் பொருட்களைக் கொள்ளையிட்டு தமது பைகளில் வைத்திருந்த 4 பேரை வைத்தியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து கொழும்பு 2 பகுதியைச் சேர்ந்த 3 பேரும் மஸ்கெலியா பகுதியைச் சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேரை வாழைச்சேனை பொலிசார் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) கைது செய்ததுடன் கொள்ளையிட்ட பொருட்களையும் மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது நீதிவான் அவர்களை 14 நாட்கள் புனானை தனிமைப்படுத்தும் நிலையத்தில் தனிமைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த நான்கு பேரையும் புனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment