அமெரிக்காவில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி டிசம்பர் 14ம் திகதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என தெரியவந்தது.
இந்த தடுப்பூசி கொரோனா வைரசை தடுப்பதில் முக்கிய பங்காற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மொடர்னா நிறுவனம் உறுவாக்கிய தடுப்பூசியும் 90 சதவிகிதத்திற்கு மேல் செயல் திறன் கொண்டது என தெரியவதது.
தடுப்பூசியின் செயல்திறன் அறிவிக்கப்பட்ட உடன் தடுப்பூசியை அமெரிக்காவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பைசர் மற்றும் மொடர்னா நிறுவனங்கள் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தது.
இதையடுத்து, அமெரிக்கா முழுவதும் டிசம்பர் 14ம் திகதி முதல் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மிகப்பெரிய அளவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
அதேபோல் டிசம்பர் 18ம் திகதி முதல் டிமாடர்னா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அனுமதிக்கப்பட்டது.
முதல்கட்டமாக கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவ ஊழியர்களுக்கு, வயதானோருக்கும் தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டிசம்பர் 14ம் திகதி தடுப்பூசி போடும்பணி தொடங்கப்பட்ட நிலையில் 10 நாட்களில் எத்தனை பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற தகவலை அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் இயக்குனர் ராபர்ட் ரெட்ஃப்ல்ட் நேற்றுமுன்தினம் வெளியிட்டார்.
அந்த தகவலின்படி இங்கிலாந்தில் டிசம்பர் 14ம் திகதி முதல் டிசம்பர் 23 வரை 10 நாட்களில் 10 லட்சத்திற்கு அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், அடுத்த ஆண்டின் மார்ச் மாத இறுதிக்குள் 10 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
தடுப்பூசியின் முதல் டோஸ் தற்போது போடப்பட்டுள்ளவர்கள் தடுப்பூசியின் 2வது டோஸ் ஐ 21 நாட்களுக்கு பின்னர் போட்டுக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment