எஸ்.எம்.எம்.முர்ஷித்
மட்டக்களப்பு - கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையிலும், மக்களின் பாதுகாப்பு கருதியும் பொது இடங்களில் திரவத் தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.
இதனடிப்படையில், கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட வாழைச்சேனை பிரதான வீதி, வியாபார நிலையங்கள், வங்கிகள் உட்பட்ட பல்வேறு இடங்களில் திரவத் தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கை இன்று (11) மேற்கொள்ளப்பட்டது.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வழிகாட்டலில் கோறளைப்பற்று பிரதேச சபையினால் திரவத் தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
No comments:
Post a Comment