சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இராஜினாமா செய்ய வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்த்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுகாதார அமைச்சரும் அரசாங்கமும் கொரோனா வைரஸ் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக ருவான் விஜயவர்த்தன குற்றம் சாட்டியுள்ளார்.
சுகாதார விடயங்களில் நிபுணத்துவம் மிக்க ஒருவரை சுகாதார அமைச்சராக ஜனாதிபதியும் பிரதமரும் நியமிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுமக்களின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த முடியாது நாட்டு மக்களின் சுகாதாரத்தை உடல்நலத்தை பாதுகாக்கக்கூடிய ஒருவரை சுகாதார அமைச்சராக நியமிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுள்ளது, ஜனாதிபதிக்கு பலமான அதிகாரங்கள் உள்ளன என சுட்டிக்காட்டியுள்ள ருவான் விஜயவர்தன இந்த வலிமையான சக்திகளுக்கு எதிராக எதிர்கட்சிகள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் போராட வேண்டியிருக்கும் எதிர்கட்சிகள் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இணைய வேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தை தோற்கடித்து ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக ஐக்கிய தேசிய கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைய வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தினக்குரல்
No comments:
Post a Comment