கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் இறுதி நிகழ்வுகளை முன்னெடுக்கும்போது மத சிறுபான்மையினரின் உரிமைகளை அரசாங்கம் மதிக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் தகனம் செய்யலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த விடயத்தில் மத சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமது மத நம்பிக்கைளுக்கு மீறி கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது குறித்து முஸ்லீம் சமூகம் கரிசனை வெளியிட்டு வரும் நிலையிலேயே மன்னிப்புச் சபை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
No comments:
Post a Comment