போகம்பறை சிறைச்சாலையில் மேலும் 23 கைதிகள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
போகம்பறை சிறைச்சாலையில் நேற்றைய தினம் 23 கைதிகள் மற்றும் குருவிட்ட சிறைச்சாலையில் ஒருவர் ஆகியோர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சிறைகளில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 120 தாண்டிவிட்டதாகச் சிறைச்சாலை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment