அமெரிக்க ஜனாதிபதியின் மூத்த மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மூத்த மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் (42), கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அறிகுறிகள் எதுவும் இன்றி அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது மருத்துவ வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வருகிறார் என அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், ட்ரம்பின் தனிப்பட்ட வழக்கறிஞர் ருடி கியுலியானியின் மகன் ஆண்ட்ரூ கியுலியானியும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப், இளைய மகன் பாரன் ட்ரம்ப் ஆகியோர் தொற்று பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
No comments:
Post a Comment