தொலைநோக்கு முறைமை ஊடாக பாடசாலை கற்றல் நடவடிக்கையினை முன்னெடுக்க உறுதியான கொள்கை வகுக்கப்படும் - சுசில் பிரேமஜயந்த - News View

About Us

About Us

Breaking

Monday, November 23, 2020

தொலைநோக்கு முறைமை ஊடாக பாடசாலை கற்றல் நடவடிக்கையினை முன்னெடுக்க உறுதியான கொள்கை வகுக்கப்படும் - சுசில் பிரேமஜயந்த

(இராஜதுரை ஹஷான்) 

நெருக்கடியான சூழ்நிலையில் தொலைநோக்கு முறைமை ஊடாக பாடசாலை கற்றல் நடவடிக்கையினை முன்னெடுக்க உறுதியான கொள்கை வகுக்கப்படும் என தொலை நோக்கு கல்வி முறைமை இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எவ்வித பிரச்சினைகளுமின்றி இடம்பெற்று முடிந்துள்ளது.

பாடசாலை விடுமுறை காலத்தில் தொலைநோக்கு கல்வி முறைமை ஊடாக கற்றல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. கொவிட்-19 வைரஸ் தாக்கம் எக்காலத்திலும் எதிர்பார்க்கும் விதமாக உள்ளது. 

விடுமுறை காலத்தில் தொலை நோக்கு முறைமை ஊடாக கற்றல் நடவடிக்கையினை முன்னெடுக்க உறுதியான கொள்கை வகுக்கப்படும். சவால்களை வெற்றி கொண்டு பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இவ்விடயத்தில் அரசியல் நோக்கம் கருதி குற்றஞ்சாட்டுவதை எதிர்த்தரப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தொலைநோக்கு முறைமையில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க கல்வி அமைச்சுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

No comments:

Post a Comment