தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் சி.ஐ.டி. யினரால் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 11, 2020

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் சி.ஐ.டி. யினரால் கைது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பூ.பிரசாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆரயம்பதியிலுள்ள தனது வீட்டிலிருந்து மட்டக்களப்பு வாவி கரையிலுள்ள காரியாலயத்துக்கு சென்று கொண்டிருந்த போதே, இன்று காலை 9.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2008ஆம் ஆண்டு ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக பூ.பிரசாந்தன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான சாட்சிகளை அவர் அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment