கோப்பாயில் கொவிட்-19 சிகிச்சைக்கு 50 க்கும் அதிகமான வெளிநாட்டவர் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 11, 2020

கோப்பாயில் கொவிட்-19 சிகிச்சைக்கு 50 க்கும் அதிகமான வெளிநாட்டவர் அனுமதி

கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் இயங்கும் கொவிட்-19 மருத்துவமனையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் தங்கியுள்ள பல வெளிநாட்டவர்களும் கொரோனா தாக்கத்துக்கு இலக்காகி வருகின்றனர்.

இதேவேளை கொழும்பில் இலங்கையரும் நோய்த் தாக்கத்துக்கு இலக்காவதால் தென்பகுதி மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளரால் நிரம்பியுள்ளன.

கொழும்பில் தங்கி நின்று பணியாற்றிய பல வெளிநாட்டவர்களுக்கும் தற்போது கொரோனா தொற்றுப் பரவ ஆரம்பித்த நிலையில் நேற்றையதினம் யாழ்ப்பாணம் கோப்பாயிலுள்ள கல்வியியல் கல்லூரியில் இயங்கும் கொரோனா மருத்துவமனையில் 50 ற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் கொழும்பு மாநகர சபையின் ஓர் ஒப்பந்தப் பணியில் ஈடுபட்ட 40 இந்தியத் தொழிலாளர்களும் கொவிட்-19 நோய்த் தாக்கத்திற்கு இலக்கான நிலையில் கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment