தேசிய பட்டியல் இடத்திற்கு ரணிலை நியமிக்கவும் - கட்சி பிரதிநிதிகள் கோரிக்கை - இறுதி முடிவு அடுத்த வாரம் - News View

About Us

About Us

Breaking

Sunday, November 22, 2020

தேசிய பட்டியல் இடத்திற்கு ரணிலை நியமிக்கவும் - கட்சி பிரதிநிதிகள் கோரிக்கை - இறுதி முடிவு அடுத்த வாரம்

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று காலை நடைபெற்ற கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க செல்ல வேண்டும் என கட்சிப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க கடந்த வாரம் இந்த முன்மொழிவை முன்வைத்தார் என்றும் இதனை தான் ஆதரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு எதிர்நோக்கியுள்ள இக்கட்டான சூழ்நிலையில் அனுபவம் வாய்ந்த ஒருவரான ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இருக்க வேண்டியது அவசியம் என இந்தக் கூட்டத்தல் கலந்துகொண்ட உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவிடம் சுட்டிக்காட்டியதாக அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

இந்த விடயங்களை சுட்டிகாட்டி கட்சி பிரதிநிதிகள் அனைவரும் ஒரு கோரிக்கைக் கடிதத்தில் கையெழுத்திட்டு அதை ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைத்தனர் என்றும் அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டார்.

இருப்பினும் ரணில் விக்ரமசிங்கவிற்கு இதில் உடன்பாடு இல்லை என்ற போதும் கட்சி பிரதிநிதிகளின் கோரிக்கை அமைய இறுதி முடிவு அடுத்த வாரமளவில் எட்டப்படும் என்றும் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரு பிரிவினர் கட்சிக்கு கிடைத்த தேசிய பட்டியல் மூலம் ரணில் விக்ரமசிங்கவே நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என விரும்புவதாக அக்கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன நேற்று தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment