கண்டி பெரியாஸ்பத்திரியில் இரு குழுக்களிடையே மோதல் : இருவர் காயம், ஐவர் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 4, 2020

கண்டி பெரியாஸ்பத்திரியில் இரு குழுக்களிடையே மோதல் : இருவர் காயம், ஐவர் கைது

கண்டி பெரியாஸ்பத்திரியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்புக் காரணமாக இருவர் காயமடைந்ததை தொடர்ந்து, அவர்கள் அவ்வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு, இச்சம்பவம் தொடர்பில் 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, கைது செய்யப்பட்டுள்ளவர்களில் காயமடைந்த இருவர் அடங்குகின்றனர்.

குறித்த வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது, வெளியில் இருந்த இரு குழுக்களுக்கிடையில் நேற்றிரவு (03) கைகலப்பு ஏற்பட்டிருந்ததோடு, இதன் காரணமாக அங்கு பரபரப்பும் ஏற்பட்டிருந்தது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கண்டி பெரியாஸ்பத்திரிக்குச் செல்லும் பாதையில் வசிக்கும் உறவினர்களைக் கொண்ட இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு, கைது செய்யப்பட்டவர்களில் தந்தை ஒருவரும் இரு மகன்களும் அடங்குவதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்துள்ளவர்களில் 70 வயதுடைய பெண் ஒருவர் அடங்குவதாகவும் தெரியவருகின்றது. 

இது தொடர்பாக விரிவான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

(எம்.ஏ. அமீனுல்லா)

No comments:

Post a Comment