மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளான இராணுவ சிப்பாய் பலி - முல்லைத்தீவில் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Monday, November 23, 2020

மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளான இராணுவ சிப்பாய் பலி - முல்லைத்தீவில் சம்பவம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் ஒட்டுசுட்டான் பிரதான வீதியில் மணவாளன்பட்டமுறிப்பு பகுதியில் மோட்டார் சைக்கிலில் பயணித்த இராணுவ சிப்பாய் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.

மாங்குளம் பகுதியில் நிலைகொண்டுள்ள 574 ஆவது படைப் பிரிவினைச் சேர்ந்த குறித்த சிப்பாய் நேற்று முந்தினம் (21) இரவு மோட்டார் சைக்கிலில் ஒட்டுசுட்டானில் இருந்து மாங்குளம் நோக்கி வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை மணவாளன்பட்டமுறிப்பு பகுதியில் வீதியில் நின்ற மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

உடனடியாக குறித்த பகுதி வழியாக சென்ற நோயாளர் காவுவண்டி ஊடாக மாங்குளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது குறித்த இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ளார்

சம்பவத்தில் உயிரிழந்தவர் 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாகிய கலாகம வீதி, புகையிரத நிலைய சந்தி, மதவாச்சியை சேர்ந்த கொள்ளு பத்திரகே சமிந்த கௌஸால் கல்தேரா என்ற இராணுவ வீரராவார்.

இவரது சடலம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் இராணுவ பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு நிருபர் தவசீலன்

No comments:

Post a Comment