யாழ்ப்பாணம், கரவெட்டி அல்வாய் பகுதியில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் அண்மையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் மற்றும் சிறுவன் ஒருவனுக்கு கொவிட்-19 தொற்றுள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களுக்கு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் பின்வரும் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.
‘கரவெட்டியிலுள்ள மனோகரா அல்வாயைச் சேர்ந்த ஒரே குடும்பத்திலுள்ள மூவருக்கு கொரோனா தொற்று கார்த்திகை 05ஆம் திகதி இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கரவெட்டி மற்றும் அண்மைய பிரதேசங்களில் பல்வேறு இடங்களுக்குச் சென்று பல்வேறு நபர்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றனர்.
இவர்கள் தொடர்பான விபரங்கள் தெரிந்தவர்கள் அல்லது இவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் வட மாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 2 4மணி நேர அவசர அழைப்பிற்குரிய 021 2226666 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு விபரங்களை அறியத்தரவும். இவ்விபரங்கள் தொடர்பான இரகசியத்தன்மை இறுக்கமாகப் பேணப்படும்.
இவர்கள் தொடர்பான விபரங்களை அறிவிப்பதன் மூலம் உங்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா எனப் பரிசோதித்து அறியவும் உங்களது குடும்பங்களையும் அயலவர்களையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசர சேவைகளை உடனடியாக வழங்குவதற்கும் சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நோய் எமது மாவட்டத்தில் பரவாதிருக்க அச்சமின்றி சமூக பொறுப்புணர்வுடன் உங்களின் தகவல்களை வழங்கி; ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்’ என அவ்வறிவித்தலில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment