இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றார் சி.டி. விக்ரமரத்ன - News View

About Us

About Us

Breaking

Friday, November 27, 2020

இலங்கையின் 35 ஆவது பொலிஸ்மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றார் சி.டி. விக்ரமரத்ன

இலங்கையின் 35ஆவது பொலிஸ்மா அதிபராக, சீ.டி. விக்ரமரத்ன இன்று (27) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பதில் பொலிஸ்மா அதிபராக சுமார் இரண்டு வருடங்களாக பணியாற்றிய, சீ.டி. விக்ரமரத்ன, 1986 இல் பயிற்சி உதவி பொலிஸ் அத்தியட்சகராக சேவையில் இணைந்ததோடு, பொலிஸ் திணைக்களத்தில் 34 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் இடத்திற்கு, பொலிஸ்மா அதிபர் விக்ரமரத்ன அந்த பதவியில் சுமார் ஒரு வருடம் ஏழு மாதங்கள் பணியாற்றினார்.

ஏற்கனவே காணப்பட்ட அரசியலமைப்பிற்கு அமைய, பொலிஸ்மா அதிபரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லாத நிலையில், தற்போது கொண்டுவரப்பட்ட 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு அமைய, சீ.டி. விக்ரமரத்னவை பொலிஸ்மா அதிபராக நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் பரிந்துரையை, பாராளுமன்ற பேரவை அங்கீகரித்திருந்தது.

பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹானா கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் கோட்டெவாலா பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment