நீர்கொழும்பு மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைகள் காரணமாக நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் 25 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
மஹர சிறைச்சாலையிலிருந்து நான்கு கைதிகளின் உடல்கள் ராகம வைத்தியசாலைக்கு வந்துள்ளன என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
24 பேர் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் வைத்தியாசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சிறைச்சாலையில் கலகம் ஏற்பட்டதை தொடர்ந்து துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றிரவு 9.55 மணியளவில் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
சிறைச்சாலையில் பாரிய தீ மூண்டுள்ளதை காண முடிவதாக அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த, 6 தீயணபப்பு வாகனங்களை ஈடுபடுத்தியாக, தீயணைப்பு பிரிவு அறிவித்துள்ளது.
தொலைவிலிருந்து பார்க்கும்போது பாரிய தீயை காண முடிகின்றது துப்பாக்கி சத்தங்களும் கேட்டன என அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment