கட்டாரிலிருந்து 22 பேர் இலங்கை வந்தனர் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 5, 2020

கட்டாரிலிருந்து 22 பேர் இலங்கை வந்தனர்

இன்று (05) காலை கட்டாரின், டோஹாவிலிருந்து 22 பேர் இலங்கை திரும்பியுள்ளனர்.

டோஹா, கட்டாரிலிருந்து QR 668 எனும் விமானம் ஊடாக 22 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இவ்வாறு நாட்டுக்கு வந்த அனைவரும் முப்படைகளால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை நேற்று (04), எந்தவொரு விமானமும் பயணிகளை ஏற்றி வரவில்லை என, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment