கல்முனைப் பிராந்திய சுகாதார பிரிவில் இதுவரை 22 பேருக்கு கொரோனா : பொதுமக்களைத் தேடி அக்கரைப்பற்று அதிகாரிகள் விரைவு - News View

About Us

About Us

Breaking

Thursday, November 19, 2020

கல்முனைப் பிராந்திய சுகாதார பிரிவில் இதுவரை 22 பேருக்கு கொரோனா : பொதுமக்களைத் தேடி அக்கரைப்பற்று அதிகாரிகள் விரைவு

பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

அக்கரைப்பற்றிலிருந்து கொழும்புக்கு நடாத்தப்படுகின்ற தனியார் போக்கு வரத்துச் சேவையில் சாரதியாகக் கடமையாற்றுகின்ற வரக்காப்பொலயைச் சேர்ந்த ஒருவருக்கு பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வடைந்துள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரம்பல் குறித்த விடயம் தொடர்பில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஊடகவியலாளர்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் இன்று (19) மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தெரிவித்துள்ளதாவது, தற்போது அம்பாறை மாவட்ட நிலைமை கருதி சுகாதாரப் பிரிவினரும் பொலிஸாரும் ஒன்றிணைந்து பல்வேறுபட்ட தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் பிரதேசத்தில் முன்னெடுத்து வருகின்றனர். 

அம்பாறை, அக்கரைப்பற்றிலிருந்து கொழும்புக்கு நடாத்தப்படுகின்ற தனியார் போக்கு வரத்துச் சேவையில் சாரதியாகக் கடமையாற்றுகின்ற வரக்காப்பொலயைச் சேர்ந்த ஒருவருக்கு இன்று கொரோனா தொற்றிருப்பது பீ.சி.ஆர். சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவருடன் தொடர்புகளைக் கொண்டிருந்த ஏனைய பொதுமக்களைத் தேடி அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரிகளின் குழாம் விரைந்துள்ளது.

ஏற்கனவே தென் பகுதியிலிருந்து வந்த மாம்பழம் கொள்வனவு செய்கின்ற லொறிச்சாரதியுடன் வந்தவருக்கு கொரோனா தொற்றிருப்பது தெரியவந்ததையடுத்து, அக்கரைப்பற்றில் அவர் மாங்காய்களைக் கொள்வனவு செய்த மூன்று குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றதனர். 

அத்துடன், அவருடன் இணைந்து வந்திருந்த தென் பகுதியைச் சேர்ந்த மேலும் 19 பேர் இறக்காமம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர். மாதிரிகளும் பெறப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், கல்முனைப் பிராந்தியத்தில் வாழும் சகலரும் கொரோனாவுக்கெதிரான தடுப்பு சுகாதார விதிகளை மிகவும் இறுக்கமாக கைக்கொள்ளுமாறு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன் தெரிவித்தார். 

இதுவரை, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இதனடிப்படையில், பொத்துவில் - 7, கல்முனை - 3, மருதமுனை - 2, சாய்ந்தமருது - 1, அக்கரைப்பற்று - 2, இறக்காமம் - 6, திருக்கோவில் (தம்பிலுவில்) - 01 என 22 பேர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment