இலங்கையில் 20 வீதமானவர்களுக்கு COVID-19 தடுப்பூசி வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் - News View

About Us

About Us

Breaking

Monday, November 9, 2020

இலங்கையில் 20 வீதமானவர்களுக்கு COVID-19 தடுப்பூசி வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம்

இலங்கை சனத் தொகையில் 20 வீதமானவர்களுக்கு COVID-19 தடுப்பூசியை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணங்கியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஆராய, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக தேவைப்படும் நிதியை பெற்றுக் கொடுத்தல், தடுப்பூசிக்கான தேவையுடையவர்களை அடையாளங்காணல், அது தொடர்பிலான பௌதீக வள முகாமைத்துவம், தகவல்களை பெற்றுக் கொள்ளல், விடயங்களை முன்வைத்தல் என்பனவற்றை குறித்த குழு முன்னெடுக்குமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

COVID-19 தொற்றைத் தடுப்பதற்காக இலங்கையில் அதற்கான தடுப்பூசியை பயன்படுத்துவது தொடர்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் இன்று (9) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த கலந்துரையாடலில் மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஔடதங்கள் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதியும் பங்குபற்றியிருந்தனர்.

No comments:

Post a Comment