மஸ்கெலியாவில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - வெளி மாவட்டங்களில் இருந்து வருவோர் தனிமைப்படுத்தப்படுவர் - News View

About Us

About Us

Breaking

Saturday, November 7, 2020

மஸ்கெலியாவில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - வெளி மாவட்டங்களில் இருந்து வருவோர் தனிமைப்படுத்தப்படுவர்

கொழும்பு மற்றும் கம்பஹா உட்பட கொரோனா அனர்த்தமுள்ள பகுதிகளில் இருந்து தீபாவளி பண்டிகைக்காக மலையகத்துக்கு வருவதை இம்முறை தவிர்த்துக் கொள்ளுங்கள். அவ்வாறு வரும் பட்சத்தில் முழு குடும்பத்தையும் சுய தனிமைக்கு உட்படுத்த வேண்டிய நிலைஏற்படும்.' என்று மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி துரைசாமிபிள்ளை சந்திரராஜன் தெரிவித்தார

மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று வரை (07.11.2020) மொத்தமாக 15 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி துரைசாமிபிள்ளை சந்திரராஜன் 'மஸ்கெலியா 'எம்.ஓ.எச்.' பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இதுவரையில் 15 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஏழு பேருக்கு நேற்று வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவர்கள் பேலியகொடை மீன் சந்தை கொத்தணி பரவலுடன் தொடர்புபட்டவர்களாவர்.

அதேவேளை, எமது மலையக மக்களில் சிலர் கொழும்பு உட்பட வெளிமாவட்டங்களில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். தொழில் புரிபவர்களும் இருக்கின்றனர். அவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மலையகத்துக்கு குறிப்பாக நகரப்பகுதிகளிலும், பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள தமது வீடுகளுக்கு வருவதற்கு முயற்சிக்கக்கூடும்.

கொழும்பு, கம்பஹா உட்பட கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மிக்க மாவட்டங்களில் இருந்து மலையகத்துக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். 

அவர்கள் வருகை தருவதன் மூலம் உறவினர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதுமட்டுமல்ல அவர்கள் அவ்வாறு வந்தாலும் இங்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

சிறிய வீடுகள் என்பதால் ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். தாங்கள் இருக்கும் இடங்களில் இருந்தே இம்முறை சுகாதார பாதுகாப்புடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment