உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 48 லட்சத்தை கடந்தது.
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் \ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
குறிப்பாக இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்துள்ளது. இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 81 ஆயிரத்து 484 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 51 ஆயிரத்து 375 பேருக்கும், பிரேசிலில் 33 ஆயிரத்து 2 பேருக்கும் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் உலகிலேயே கொரோனா அதிவேகமாக பரவும் நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3 கோடியே 48 லட்சத்து 17 ஆயிரத்து 606 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்
அமெரிக்கா - 75,49,295
இந்தியா - 63,94,069
பிரேசில் - 48,82,231
ரஷியா - 11,94,643
கொலம்பியா - 8,41,531
பெரு - 8,21,564
ஸ்பெயின் - 8,10,807
அர்ஜெண்டினா - 7,79,689
மெக்சிகோ - 7,48,315
தென் ஆப்பிரிக்கா - 6,77,833
No comments:
Post a Comment