நீண்ட காலம் நிலைத்திருக்க கூடிய புதிய அரசியலமைப்பினை உருவாக்குமாறு அஸ்கிரிய பீடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
19 வது திருத்தத்தில் இடம்பெற்றுள்ள சாதகமான அம்சங்களை பாதுகாக்க வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
20 வது திருத்தம் குறித்த இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னர் பொதுமக்களினதும், மதத் தலைவர்களினதும் கருத்துக்களையும், 20 திருத்தத்தின் நகல் வடிவு குறித்து ஆராய்வதற்காக பிரதமர் நியமித்த குழுவின் கருத்துக்களையும் ஆராய வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment