கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க கிழக்கு மாகாணத்தில் மாவட்டம் தோறும் ஒரு வைத்தியசாலை - சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 11, 2020

கொரோனாவுக்கு சிகிச்சையளிக்க கிழக்கு மாகாணத்தில் மாவட்டம் தோறும் ஒரு வைத்தியசாலை - சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் லதாகரன்

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிப்பதற்கான வசதிகளுடன் கூடியதாக கிழக்கு மாகாணத்தில் மாவட்டம் தோறும் ஒரு வைத்தியசாலையைத் தயார்படுத்துமாறு சுகாதார அமைச்சு பணித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி. லதாகரன் தெரித்துள்ளார்.

மாவட்டம் தோறும் ஒரு வைத்தியசாலையை கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக பயன்படுத்தும் திட்டத்திற்கு அமையவே இந்நடவடிக்கை இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை சுகாதார பிராந்தியங்களில் உள்ள வைத்தியசாலைகள் கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை நிலையங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் தீவிரமடைந்தால் இன்னும் தேவைக்கேற்ப பல வைத்தியசாலைகளை கொரோனா வைரஸ் சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளாக மாற்றியமைக்க சுகாதார அமைச்சு முடிவுசெய்துள்ளது” என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி. லதாகரன் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment