ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் சி.ஐ.டி. யினர் விசாரணை - News View

About Us

About Us

Breaking

Thursday, October 15, 2020

ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் சி.ஐ.டி. யினர் விசாரணை

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

கொழும்பில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு இன்று (15) பிற்பகல் சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரிடம் இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ரஷாட் பதியுதீனைக் கைது செய்வதற்காக பொலிஸ் குழுக்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெறாத நிலையிலேயே அவரது மனைவிடம் விசாரணை நடத்தியதுடன், நீண்ட வாக்குமூலம் ஒன்றையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment