அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களின் இரண்டாவது நேருக்கு நேர் விவாதம் ரத்து - News View

About Us

About Us

Breaking

Saturday, October 10, 2020

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்களின் இரண்டாவது நேருக்கு நேர் விவாதம் ரத்து

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையே ஒக்டோபர் 15 இல் நடக்கவிருந்த நேருக்குநேர் விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையே இரண்டாவது நேருக்குநேர் விவாதம் ஒக்டோபர் 15 ஆம் திகதி மியாமியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த விவாத நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருப்பதாக ஜனாதிபதி விவாதங்களுக்கான ஆணையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இரு கட்சிகளும், இது தொடர்பாக மாற்றுத் திகதி தொடர்பான பரிந்துரையை தெரிவித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காக நேரடி விவாதத்தை காணொளி வாயிலாக நடத்த விவாதங்களுக்கான ஆணையம் முடிவு செய்தது. காணொளி மூலம் விவாதத்தில் பங்கேற்க டிரம்ப் மறுத்து விட்டதை அடுத்து விவாதம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இடையிலான கடைசி நேருக்கு நேர் விவாதம் வரும் 22ம் திகதி டென்னிசி மாநிலம் நாஷ்வில்லேயில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி விவாதங்களுக்கான ஆணையம் செய்து வருகிறது.

கடந்த 1976 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் பங்குபெறும் விவாதம் நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment