கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றும் சிற்றூழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தேசிய வைத்தியசாலையின் 3 விடுதிகள் (ward) மற்றும் ஒரு சத்திரசிகிச்சை கூடம் ஆகியன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட விதம் குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment