களனி பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு கொரோனா - மேலும் இரு மாணவிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை - News View

About Us

About Us

Breaking

Saturday, October 10, 2020

களனி பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு கொரோனா - மேலும் இரு மாணவிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை

களனி பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமூக விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரே இவ்வாறு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மினுவங்கொடை பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவியின் தந்தை மினுவங்கொடை ஆடைத் கைத்தொழிற்சாலையின் ஊழியர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவியுடன் தங்கியிருந்த மேலும் இரு மாணவிகள் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்ட ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் நாளை (12) தீர்மானிக்கப்பட உள்ளதாக பல்கலைகழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.

அதுவரையில் எந்தவொரு மாணவரும் பல்கலைகழக வளாகத்திற்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment