பட்டதாரி பயிலுனரான இளம் தாய் மரணம் - மட்டக்களப்பில் சம்பவம் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 24, 2020

பட்டதாரி பயிலுனரான இளம் தாய் மரணம் - மட்டக்களப்பில் சம்பவம்

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின், ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த நாகேந்திரன் நாகப்பிரியா (வயது 27) என்ற பட்டதாரி பயிலுனரான இரண்டு மாத ஆண் குழந்தையின் தாய், புற்று நோய் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சமயம் வியாழக்கிழமை மாலை 22.10.2020 உயிரிழந்துள்ளார்.

இவருக்கு ஏற்கெனவே புற்று நோய்க்கான சிகிச்சையின் பிரகாரம் ஒரு கால் அகற்றப்பட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

நாகப்பிரியா மரணித்த செய்தி கேட்டு அவரது வசிப்பிடமான ஆறுமுகத்தான்குடியிருப்பு ஊர் சோகத்தில் உறைந்து போனது.

சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைகளின் பின்னர் வெள்ளிக்கிழமை உறவினர்களிடம் ஒப்படைப்பட்டது.

No comments:

Post a Comment