கிணறு ஒன்றில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Friday, October 9, 2020

கிணறு ஒன்றில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்பு

யாழ். தென்மராட்சி வரணி பகுதியில் உள்ள அந்தோணியார் தேவாலய கிணற்றில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்க்கப்பட்டுள்ளன.
வரணியில் அமைந்துள்ள குறித்த அந்தோணியார் தேவாலயத்தின் திருவிழா ஆரம்பமாக உள்ள நிலையில் நேற்று (09) கிணறு துப்பரவு செய்யப்பட்டது.

இதன்போது சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் இருப்பதை அறிந்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதையடுத்து அக்கிணற்றில் இருந்து நேற்று மாலை ஒரு தொகுதி வெடி பொருட்கள் கொடிகாமம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

12 மோட்டார் குண்டுகளும் ஒரு கைக்குண்டு என்பன இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வெடி பொருட்கள் மீட்கப்பட்ட வரணி அந்தோணியார் தேவாலய வளாகத்திற்கு முன்பாக இராணுவ முகம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ். நிருபர் பிரதீபன்

No comments:

Post a Comment