சாரா உயிருடன் இருப்பதாக தகவல் வழங்கிய நபருக்கு ஆஜரான சட்டத்தரணிக்கு அச்சுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Friday, October 9, 2020

சாரா உயிருடன் இருப்பதாக தகவல் வழங்கிய நபருக்கு ஆஜரான சட்டத்தரணிக்கு அச்சுறுத்தல்

பாறுக் ஷிஹான்

சாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் எனக்கூறப்படும் சாரா என்ற புலஸ்தினி உயிருடன் இருப்பதாகவும், தான் அவரைக் கண்டதாகவும் தகவல் வழங்கிய நபருக்கு ஆஜரான சட்டத்தரணிக்கு இனந்தெரியாதோர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

சாய்ந்தமருது தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 16 பேரின் உடற்பாகங்களையும் குடும்ப உறுப்பினர்களின் மரபணுப் பரிசோதனை அறிக்கைகளைக் கொண்டு பகுப்பாய்வு செய்ததில் சந்தேகத்திற்கிடமாகத் தேடப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்பவரின் மரபணுப் பரிசோதனை அறிக்கை (DNA) பொருந்தவில்லை என மன்றில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர் தப்பிச் சென்று விட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு விசாரணையைத் தொடர்ந்து, தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்று சில தினங்களுக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிக்குடி பொலிஸ் எல்லைக்குட்பட்ட புறநகர்ப் பகுதியொன்றில் சாரா என்றழைக்கப்படும் புலஸ்தினி என்பவரைக் கண்டதாக 43 வயது மதிக்கத்தக்க நபரொருவர் பாதுகாப்புத் தரப்பினரிடம் தகவல் வழங்கியிருந்தார்.

இவ்வாறு தகவல் வழங்கிய குறித்த நபருக்கு இனந்தெரியாதோரினால் தொலைபேசியூடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாக சட்டத்தரணி ஒருவரூடாக கடந்த ஒக்டோபர் மாதம் திங்கட்கிழமை (5) அன்று கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் தனக்கு நிகழ்ந்த அச்சுறுத்தல் விடயமாக சட்டத்தரணி ஒருவருடன் நீதிவானுக்கு மூடிய அறையில் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

இதற்கமைய குறித்த விடயத்தை விசாரணை செய்த நீதிவான் மேலதிக நடவடிக்கை எடுப்பதற்காக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ம் திகதி வரை ஒத்திவைத்தார்.

இந்நிலையில், குறித்த நபருக்கு ஆஜரான சட்டத்தரணிக்கு மறுநாள் இரவு தொலைபேசியூடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் தவணையில் அவ்வழக்கில் ஆஜராகக்கூடாதெனத் தெரிவிக்கப்பட்டதாகவும் குறித்த சட்டத்தரணி கல்முனை நீதிமன்ற நீதிவானின் கவனத்திற்குக் கொண்டு செல்லவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment