78 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று! - News View

About Us

About Us

Breaking

Saturday, October 31, 2020

78 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று!

கடந்த 4 ஆம் திகதி முதல் இன்று மதியம் 4 மணி வரையான காலப்பகுதியில் 78 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

அத்தோடு மேலும் 400 அதிகாரிகள் தனிமைப்படுத்தபட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இன்று காலை தெரிவித்திருந்தார்.

மேலும், பேலியகொட மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புபட்டவர்களாகவே குறித்த பொலிஸ் அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அண்மையில், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மீன் கொள்வனவு செய்வதற்காக பேலியகொட மீன் சந்தைக்கு சென்றுள்ளமையினாலேயே கொரோனா தொற்று பரவியுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment