ஊடக அமைச்சில் நால்வருக்கு கொரோனா - 40 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 31, 2020

ஊடக அமைச்சில் நால்வருக்கு கொரோனா - 40 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டனர்

வெகுஜன ஊடக அமைச்சின் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் உதவி பணிப்பாளர், அபிவிருத்தி அதிகாரியொருவர் மற்றும் இரண்டு அலுவலக உதவியாளர்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாலக களுவெவ தெரிவித்தார்.

அதனையடுத்து, 40 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், நிறுவனத்தின் செயற்பாடுகளை பாதுகாப்பாக முன்னெடுத்துச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment