பௌத்த மத தலைவர்களின் ஆதரவுடனேயே 20 வது திருத்தத்தை கொண்டுவர வேண்டும் - தொடர்ந்தும் பௌத்த மதகுருமார் போர்க்கொடி - News View

About Us

About Us

Breaking

Monday, October 19, 2020

பௌத்த மத தலைவர்களின் ஆதரவுடனேயே 20 வது திருத்தத்தை கொண்டுவர வேண்டும் - தொடர்ந்தும் பௌத்த மதகுருமார் போர்க்கொடி

பௌத்த மத தலைவர்களின் ஆதரவுடனேயே 20 வது திருத்தத்தை கொண்டுவர வேண்டும் என முருத்தெட்டுவாவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

வேறு எவருடைய செல்வாக்கு காரணமாக 20 வது திருத்தத்தை கொண்டு வந்தால் பௌத்த மத தலைவர்கள் அதற்கு அனுமதியளிக்க மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

பௌத்த மகாசங்கத்தின் ஆலோசனையை அங்கீகாரத்தை பெற்று 20 வது திருத்தத்தினை கொண்டுவர முயன்றால் பௌத்த மகா சங்கம் பதில்களை வழங்க தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாங்கத்தினை அதிகாரத்துக்கு கொண்டு வந்த மக்கள் மறக்கப்பட்டுள்ளனர், புதிதாக உள்வாங்கப்பட்டவர்களிடமிருந்து ஆலோசனைகள் பெறப்படுகின்றன பௌத்த மகா சபை இதனை கடுமையாக எதிர்க்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 20 வது திருத்தத்தில் மாற்றங்களை கொண்டுவருவது அல்லது அதனை பிற்போடச் செய்வதே மகா சங்கத்தினரின் நோக்கம் என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

20 வது திருத்தத்தில் உள்ள தேவையற்ற பிரிவுகளை நீக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment