கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை இன்று மாலை 4.00 மணியளவில் 17 ஆக உயர்ந்துள்ளதாக சீதுவ பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி இன்றைய தினம் குறித்த பகுதியில் மேலும் மூன்று தொழிலாளர்கள் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் 'NEXT' ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் ஆவர். மற்றையவர் 'Chiefway' ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர் ஆவார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் நேற்று மூன்தினம் மூவரும், நேற்றைய தினம் 11 பேரும் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்டது.
இந்நிலையில் அங்கு 800 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேற்றைய தினம் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களது முடிவுகள் இன்றைய தினம் வெளியாகியுமுள்ளன.
இதற்கிடையில், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் ஒரு கையுறை உற்பத்தி தொழிற்சாலையின் சுமார் 500 ஊழியர்கள் நேற்று முன்தினம் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த பி.சி.ஆர். சோதனை முடிவுகளில் எவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது வெளிப்படுத்தப்பட்டது.
No comments:
Post a Comment