10 லட்சத்து 96 ஆயிரத்து 300 பேர் பலி - உலகை புரட்டி எடுக்கும் கொரோனா - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 14, 2020

10 லட்சத்து 96 ஆயிரத்து 300 பேர் பலி - உலகை புரட்டி எடுக்கும் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்து 96 ஆயிரத்தை கடந்துள்ளது.

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள் \ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 96 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 6 ஆயிரத்து 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக நாடுகளில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 951 பேரும், பிரேசிலில் 716 பேரும் கொரோனா தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 730 பேர் உயிரிழந்துள்ளனர். 

தற்போதைய நிலவரப்படி, 3 கோடியே 87 லட்சத்து 27 ஆயிரத்து 910 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 85 லட்சத்து 20 ஆயிரத்து 646 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 70 ஆயிரத்து 65 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 2 கோடியே 90 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 10 லட்சத்து 96 ஆயிரத்து 300 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்
அமெரிக்கா - 2,21,824
பிரேசில் - 1,51,779
இந்தியா - 1,10,586
மெக்சிகோ - 84,420
இங்கிலாந்து - 43,155
இத்தாலி - 36,289
பெரு - 33,512
ஸ்பெயின் - 33,413
பிரான்ஸ் - 33,037
ஈரான் - 29,349
கொலம்பியா - 28,306

No comments:

Post a Comment