டிக்டொக் செயலி ஒப்பந்தத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி திடீர் அனுமதி - News View

About Us

About Us

Breaking

Sunday, September 20, 2020

டிக்டொக் செயலி ஒப்பந்தத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி திடீர் அனுமதி

டிக்டொக் செயலிவுடன் ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆதரவு அளித்துள்ளார்.

சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக்டொக் செயலி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், உளவு பார்ப்பதாகவும் ஜனாதிபதி டிரம்ப் குற்றச்சாட்டுகள் தெரிவித்து அந்த செயலிக்கு தடை விதிக்கப்படும் என்று அறிவித்தார்.

டிக்டொக் செயலியை அமெரிக்க நிறுவனத்துக்கு செப்டம்பர் 15ம் திகதி விற்க வேண்டும் அல்லது தடை உத்தரவு அமுலுக்கு வரும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து டிக்டொக் செயலியை வாங்க ஆரக்கிள், மைக்ரோசொப்ட், வால்மார்ட் ஆகிய நிறுவனங்கள் பேச்சு வார்த்தை நடத்தின. இதில் மைக்ரோசொப்ட் நிறுவனம் விலகியது.

ஆரக்கிள் நிறுவனம் பைட்டான்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தத்துக்கு மேற்கொண்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை அனுமதி அளிக்க முடியாது என்று டிரம்ப் தெரிவித்தார்.

பெரும்பாலான பங்கு பைடான்ஸ் நிறுவனத்திடம் இருப்பதால் ஏற்க முடியாது என்றார். இதனால் இன்று முதல் அமெரிக்காவில் டிக்டொக் மற்றும் வீ சட் செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் டிக்டொக் செயலிக்கு திடீரென அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டிக்டொக் செயலி மீதான தடையை ஒரு வாரத்துக்கு தள்ளி வைப்பதாக வர்த்தக துறை இன்று அறிவித்திருந்த நிலையில் ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனத்துடன் டிக்டொக் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் தடை தள்ளி வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே டிக்டொக் செயலிவுடன் ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்துக்கு டிரம்ப் ஆதரவு அளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது, டிக்டொக் செயலியுடன் ஆரக்கிள், வால்மார்ட் நிறுவனங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி அமெரிக்காவில் டிக்டொக் குளோபல் என்ற புதிய நிறுவனம் தொடங்கப்படும். இந்த ஒப்பந்தத்துக்கு எனது ஆதரவு உண்டு’ என்றார்.

இந்த புதிய நிறுவனத்தில் பெரும்பாலும் அமெரிக்கர்கள் இயக்குனர்களாக இருப்பார்கள். ஒரு அமெரிக்க நிர்வாக இயக்குனர் மற்றும் பாதுகாப்பு நிபுணரும் இருப்பார்கள். மேலும் டிக்டொக்கின் தகவல்கள் ஆரக்கிள் நிறுவனத்தால் சேகரித்து வைக்கப்படும்.

No comments:

Post a Comment