அடுத்த ஆண்டின் (2021) அமைதிக்கான நோபல் பரிசுக்கு ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி உள்ளிட்ட துறைகளுக்கு சிறந்த பங்களிப்பை மேற்கொண்டவர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
உலக அளவில் மிகவும் கௌரவமான பரிசாக கருதப்படும் இந்த விருதுக்கு மேற்படி துறைகளில் சிறந்து விளங்கும் பலரும் ஆண்டு தோறும் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் அடுத்த ஆண்டின் (2021) அமைதிக்கான நோபல் பரிசுக்கு ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ரஷியாவின் பிரபல எழுத்தாளர் செர்ஜெய் கோம்கோவ் இந்த பரிந்துரையை செய்ததாக கடந்த 10ம் திகதி அறிவித்து இருந்தார்.
இந்த பரிந்துரை தொடர்பாக கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் நேற்று விளக்கம் அளித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இந்த விருதுக்கு முற்றிலும் வேறுபட்ட மக்கள் பரிந்துரைக்கப்படுவது உங்களுக்கு தெரியும். இவை அனைத்தும் அந்தந்த முயற்சிகளுடன் தொடர்புடையவர்கள் முன்வைக்கும் முயற்சிகள். இந்த விவகாரத்தில் அந்த எழுத்தாளர் பரிந்துரைத்துள்ளார். பரிந்துரைக்கப்பட்டவர்களை கருத்தில் கொள்வதில் ஒரு குறிப்பிட்ட நடைமுறை உள்ளது. அந்த வகையில் இந்த பரிந்துரையை விருதுக்காக தேர்வு செய்யப்பட்டால் அது சிறப்பாக இருக்கும். இல்லையென்றாலும் எந்த பிரச்சினையும் இல்லை. இது குறித்து வேறு எதுவும் கூறுவது கடினமானது’ என்று தெரிவித்தார்.
முன்னதாக இஸ்ரேல் - அமீரகம் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட காரணமாக இருந்ததற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு அமைதி நோபல் பரிசு வழங்க வேண்டும் என நோர்வேயைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் பரிந்துரைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment