இந்தியாவுக்கான புதிய இலங்கைத் தூதுவராக மிலிந்த மொரகொட ? - News View

About Us

About Us

Breaking

Friday, August 28, 2020

இந்தியாவுக்கான புதிய இலங்கைத் தூதுவராக மிலிந்த மொரகொட ?

இந்தியாவுக்கான புதிய இலங்கைத் தூதுவராக மிலிந்த மொரகொட நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் சுபீட்சத்திற்கும் அமைதிக்கும் பிராந்திய வல்லரசான இந்தியாவுடனான உறவு மிக அவசியம் என்பதை உணர்ந்துள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ, அதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து செயற்படுகின்ற நிலையிலேயே இந்த நியமனம் இடம்பெறவுள்ளது.

தூதுவர் தரத்திலான பதவி நிலைகளுக்கு நியமிக்கப்படும் போது அதற்கு உயர் பதவிகளுக்கான பாராளுமன்றக் குழுவின் அங்கீகாரம் கிடைப்பது கட்டாயமாகையால் விரைவில் அந்தக் குழுவின் முன் அவர் ஆஜராவார் எனவும் கூறப்படுகின்றது.

இந்திய மத்திய அரசாங்கத்துடனான உறவுகளைப் பலப்படுத்துவதுடன் கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசாங்கம், நான்கு தென்னிந்திய மாநிலங்களுடனான உறவுகளையும் வலுப்படுத்துவதில் அதிக அக்கறையை வெளிப்படுத்திவரும் நிலையில் சென்னையைத் தளமாகக் கொண்ட தென் இந்தியாவிற்கான துணைத் தூதுவராக கலாநிதி வி.கே. வல்சன் நியமிக்கப்படவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

No comments:

Post a Comment