வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச் சன்னதி முருகனை அடியவர்கள் தரிசிக்க அமைச்சர் டக்ளஸ் ஏற்பாடு - News View

About Us

About Us

Breaking

Saturday, August 15, 2020

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச் சன்னதி முருகனை அடியவர்கள் தரிசிக்க அமைச்சர் டக்ளஸ் ஏற்பாடு

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமானாறு செல்வச் சன்னதி முருகன் ஆலயத்தின் உற்சவகால வழிபாடுகளில் அடியவர்கள் கலந்து கொள்ளவதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். 

எதிர்வரும் 19 ஆம் திகதி தொடக்கம் செப்ரெம்பர் 02 ஆம் திகதி வரை தொண்டமனாறு செல்வச் சந்நதி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கொவிட் 19 காரணமாக மக்கள் ஓன்று கூடுகின்ற நிழ்வுகள் சுகாதார துறையினரால் மட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 

நாடு முழுவதும் இக்கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் சந்நதி ஆலய உற்சவ கால செயற்பாடுகளுக்கும் பொது சுகாதாரத் துறையினரால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன் சுமார் 350 அடியவர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படுவரென்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அடியவர்கள் எதிர்கொள்ளக் கூடிய அசௌகரியங்கள் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. 

இதனையடுத்து, இவ் விடயம் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதமரின் ஆலோசனையின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடினார். 

இதன்மூலம், சமூக இடைவெளிகளையும் சுகாதார நடைமுறைகளையும் பேணி, செலவச் சந்நதி ஆலயத்தின் உற்சவகால வழிபாடுகளில் அடியவர்கள் கலந்து கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment