
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 52 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள் / பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக, 52,383 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 62 ஆயிரத்து 485 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில், 1,212 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதையடுத்து இதுவரை 92,475 பேர் பலியாகியுள்ளனர்.
பிரேசிலில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை தற்போது 18,84,051 ஆக உள்ளது. தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 6 லட்சத்து 89 ஆயிரத்து 679 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.
No comments:
Post a Comment