திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றினுள் இருந்து பத்தாயிரம் கிலோ அரிசி பைகளை இன்று (4) இரவு கண்டு பிடித்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய், கெமுனு மாவத்தை பகுதியிலுள்ள வீடொன்றினுள் இருந்தே பத்து கிலோ கிராம் நிறைவுடைய ஆயிரம் அரிசி பைகளை கைப்பற்றியுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் அவசர தொலைபேசி அழைப்பிற்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இவ் அரிசி பைகள் கைப்பற்றியுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை நிருபர் பாருக்
No comments:
Post a Comment