அரசியல் உறிமைகளையும் அபிவிருத்திகளையும் புதிய அரசின் மூலம் பெற்றுக் கொள்வோம் - யாழ். வேட்பாளர் டேவிட் நவரட்ணராஜ் வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Monday, July 27, 2020

அரசியல் உறிமைகளையும் அபிவிருத்திகளையும் புதிய அரசின் மூலம் பெற்றுக் கொள்வோம் - யாழ். வேட்பாளர் டேவிட் நவரட்ணராஜ் வேண்டுகோள்

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் ...
யாழில் காணப்படும் ஆயுத காலாச்சாரம் இல்லாதொளிக்கப்பட்டு படித்த பண்புள்ள சிறந்த சமூகத்தை உருவாக்குவதற்கான முன்னொடுப்புக்கள் தற்போதைய அரசினால் முன்னொடுக்கப்படுகின்றன. இச்சந்தர்ப்பத்தை எமது இளைஞர்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் டேவிட் நவரட்ணராஜ் வேண்டுகோள் விடுத்தார். 

யாழ் உடுப்பிட்டி கப்புது பிரதேசத்தில் நேற்று  இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின்போது கலத்துகொண்டு உறையாற்றுகையிலேயே அவர் அந்த வேண்டுகோளை விடுத்தார். 

இந்நிகழ்வில் மகாவெளி விவசாய நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் சமல் ராஜபக்ஷ அவர்களும் கலந்து கொண்டார். 

மேலும் அவர் உரையாற்றுகையில் எமது உரிமைகளுக்கான கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டமையால் நாம் கடந்த 30 வருட காலத்துக்கு மேலாக இருல் சூழ்ந்த யுகத்தில் பயணித்தோம். இப்பயணத்தில் உறவுகளின் உயிர்கள். எமது உறிமைகள் உடைமைகள் கல்வி போன்றவற்றை இழந்து அரசியலில் நிர்க்கதியாக்கப்பட்டோம். 

2009ம் ஆண்டு நமது நாடு சுபிட்சத்தை நோக்கி பயணத்தை ஆரம்பித்த போது யாழ் மாவட்டம் குறிப்பிட்தக்க அபிவித்திகளைகளையும் தெழில் வாய்ப்புகளையும் பெற்றுக் கொண்டது. பின்னர் 2014ம் ஆண்டிலிருந்து இதுவரைக்கும் எமது அரசியல் தலைமைகளால் சமூகம் வழிநடாத்தப்படாததால் கூலிப்படை ஆயுத கலாச்சாரம் தலைதூக்கியது. இதனால் எமது சமூகம் பல்வேறு இன்னல்களையும் கஸ்டங்களையும் மற்றும் பொருளாதார ரீதியாக தேல்விகளையும் சந்தித்ததை நாம் அறிவோம்.

எனவே இனிவரும் காலங்களில் அரசினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களிலும் தொழில் பயிற்சி வழிகாட்டல்களையும் எமது இளைஞர் சமூம் முறையாகப் பயன்படுத்தினால் மாத்திரமே நாம் இழந்த அரசியல் உறிமைகளையும். அபிவித்தி திட்டங்களின் பயன்களையும் முறையாக நாம் அடைத்துகொள்ளலாம் என்பதில் ஐயமில்லை. 

தொடந்தும் நாம் திராணியற்ற தலைமைகளை ஆதரிப்பதால் இவற்றையெல்லாம் பெற்றுக் கொள்ளமுடியதா ஓர் துர்பாக்கிய சூழ்நிலைக்கு நமது சமூகம் தள்ளப்படும் இதிலிருந்து நம் சமூம் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் எதிர்வரும் தேர்தலில் புதிய அரசை அமைக்கக்கூடிய பலம்பொருத்திய பங்காலி கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணியியை வெற்றி பெறச் செய்வதன் மூலம் நமது இலக்குகளை இலகுவில் நாம் அடைந்து கொள்ளலாம் என்று இம்முறை யாழ் மாவட்டத்தில் ஜனநாயக இடதுசாரி முன்னணியில் சார்பில் போட்டிடும் வேட்பாளர் டேவிட் நவரட்ணராஜ் தெரிவித்தார். 

No comments:

Post a Comment