ஏ.எச்.ஏ. ஹுஸைன்
குளக்கரையில் அநாதரவாக இறந்து கிடந்த நிலையில் காட்டு யானை ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை 03.07.2020 மட்டக்களப்பு - பதுளை வீதியை அண்டியுள்ள கித்துள் குளக்கரைப் பகுதியில் சுமார் 30 வயதிற்கிடைப்பட்ட காட்டு யானையொன்றின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் பொலிஸில் முறையிட்டுள்ளனர்.
இந்த காட்டு யானை இயல்பாகவே இறந்ததா அல்லது தாக்குதலுக்குள்ளாகி நிலையில் மரணமடைந்ததா என்பது பற்றிய மேலதிக விசாரணைகளில் பொலிஸாரும் வனவிலங்குத் திணைக்கள அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதைய வறட்சிக் காலப் பகுதியில் யானைகள் உட்பட வனவிலங்குகளும் கால்நடைகளும் குடிநீருக்காக அலைந்து திரிவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை குடிநீரும் உணவும் தேடி அலையும் விலங்குகள் குறிப்பாக காட்டு யானைகள் பலபோது மக்கள் வாழும் கிராமங்களுக்குள் நுழைந்து அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் கிராம மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment