நாவுல பிரதேசத்தில் பொலிஸாரின் உத்தரவை மீறி வேனில் பயணித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரை, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இச்சந்தேகநபர்களை இன்று (26) நாவுல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோதே, குறித்த விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
நாவுல பிரதேசத்தில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற குற்றச்சாட்டில், வேனுடன் நால்வர் நேற்று (25) கைது செய்யப்பட்டனர்.
குறித்த பிரதேசத்தில் குற்றத் தடுப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், குறித்த வேனை நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்த போதிலும், அவ்வுத்தரவை மீறி குறித்த வேன் பயணித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, குறித்த வேனை பின்தொடர்ந்து சென்ற பொலிஸார், வேனுடன் சந்தேகநபர்கள் நால்வரை கைது செய்ததாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 37, 38, 39 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment