எதிர்வரும் 13,14,15 ஆம் திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நாட்டுக்கு பொறுப்புகூறும் அரசியல் கட்சி என்ற வகையில், இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக, பொதுஜன பெரமுன கட்சியின், பிரதம செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், எதிர்வரும் மூன்று தினங்களுக்கு அனைத்து பொதுக் கூட்டங்களையும் இடைநிறுத்துமாறு, கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்கள் கலந்துகொள்ளும் மக்கள் சந்திப்புக்கள் மற்றும், சிறிய அளவிலான கூட்டங்கள் ஆகியவற்றை சுகாதார ஆலோசனைக்கமைய மேற்கொள்ளுமாறும் கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment