குடும்பத் தகராறு காரணமாக துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி - News View

About Us

About Us

Breaking

Monday, June 1, 2020

குடும்பத் தகராறு காரணமாக துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

மொணராகலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மொணரகாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெனகல்லந்த, மாராவ பிரதேசத்தில் நேற்றிரவு (31) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் 119 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் கிடைக்கப் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர், மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இதில் அதேயிடத்தைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment