என்னைப் பற்றி சிலர் பொய்யான வதந்திகளை பரப்புகின்றனர் இதனை நம்பவேண்டாம் - திகாமடுள்ள பொதுஜன பெரமுன வேட்ப்பாளர் றிஸ்லி முஸ்தபா - News View

About Us

About Us

Breaking

Saturday, June 27, 2020

என்னைப் பற்றி சிலர் பொய்யான வதந்திகளை பரப்புகின்றனர் இதனை நம்பவேண்டாம் - திகாமடுள்ள பொதுஜன பெரமுன வேட்ப்பாளர் றிஸ்லி முஸ்தபா

எம்.என்.எம்.அப்ராஸ்

நான் தேர்தல் முடிந்தால் கொழும்புக்கு செல்வேன் என என்னைப் பற்றி சிலர் பொய்யான வதந்திகளை பரப்புகின்றனர் இதனை நீங்கள் நம்ப வேண்டாம். மக்களுக்கு துரநோக்குள்ள சேவையை செய்யவே தேர்தலில் குதித்தேன் நான் உங்களுக்காக என்றும் பணியாற்ற தயாராக இருக்கிறேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் திகாமடுள்ள மாவட்டத்தில் இலக்கம் 06 இல் போட்டியிடும் வேட்பாளர் றிஸ்லி முஸ்தபா தெரிவித்தார்.

கல்முனை பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளியன்று இரவு (26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அங்கு அவர் உரையாற்றுகையில் இந்த தேர்தலானது எமது சமுகத்திற்கு முக்கியமானதொன்றாகும். இதன் வெற்றியில் நாமும் பங்காளராய் வர வேண்டும். கடந்த காலத்தில் யுத்ததை ஒழித்தது மாத்திரமல்லாமல் நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் சென்றது பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திலாகும். தேர்தல் வெற்றியின் பின் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கமே ஆட்சி செய்வது உறுதியாகிவிட்டது. 

எனது வெற்றியை இவ் திகாமட்டுள்ள மாவட்டத்தில் உறுதிப்படுத்த பலர் என்னுடன் இணைந்து செயல்பட்டு பலப்படுத்தி வருகின்றனர். மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி 4 ஆசனங்களை பெறுவது உறுதியாகியுள்ளது.

இதில் நானும் இறைவனின் துணையுடன் வெற்றி பெறுவேன் நீங்களும் பொதுஜன பெரமுனவின் வெற்றியிலும் எனது வெற்றியிலும் ஒட்டு மொத்தமாக பங்காளிகளாக மாறுங்கள் என்றார். 

No comments:

Post a Comment