பெண்களின் மாலையை கொள்ளையிட முயன்ற இளைஞர் சீசீரீவி உதவியுடன் கைது - மோட்டார் சைக்கிள் மீட்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 27, 2020

பெண்களின் மாலையை கொள்ளையிட முயன்ற இளைஞர் சீசீரீவி உதவியுடன் கைது - மோட்டார் சைக்கிள் மீட்பு

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதியில் வீதியால் நடந்து வந்து கொண்டிருந்த இரு பெண்களின் மாலையைக் கொள்ளையிட முயன்ற நபரை சீசீரீவி கமறாவின் உதவியுடன் பொலிசார் கைது செய்துள்ளதுடன் சம்பவத்திற்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிசார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.

ஆரையம்பதி காளியம்மன் கோயில் வீதியால் குறித்த பெண்கள் சில தினங்களின் முன்னர் நடந்து வந்து கொண்டிருந்தபோது EP-UJ 3808 இலக்க மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் பெண்ணின் கழுத்திலிருந்த மாலையைக் கொள்ளையிட  முயன்றுள்ளார்.

குறித்த நபரை பொலிசார் தேடிவந்த நிலையில் சீசீர்வி கடறாவின் உதவியுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரை நீதிமன்றித்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர். 

ரீ.எல்.ஜவ்பர்கான் - புதிய காத்தான்குடி நிருபர்

No comments:

Post a Comment